close
Choose your channels

வனிதா, மீராவுக்கு ஆப்பு வைத்த சக போட்டியாளர்கள்: பிக்பாஸ் மனசு வைப்பாரா?

Tuesday, July 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் டாமினேட் செய்து வரும் வனிதாவும், பிரச்சனைகளை தூண்டிவிடும் மீராவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் பிக்பாஸ் வீடே அமைதிப்பூங்காவாக மாறிவிடும். இது மக்களின் எண்ணம் மட்டுமில்லை, சக போட்டியாளர்களின் எண்ணமாகவும் உள்ளது.

இதனால்தான் நேற்றைய நாமினேஷன் படலத்தில் வனிதாவையும், மீராவையும் ஏழு பேர்கள் நாமினேட் செய்தனர். மதுமிதாவை ஆறு பேர்களும், சரவணனை நான்கு பேர்களும் மோகன் வைத்யாவை இரண்டு பேர்களும் நாமினேட் செய்ததால் வனிதா, மீராமிதுன், மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா என ஐந்து பேர் இந்த வார எவிக்சன் பட்டியலில் உள்ளனர். மேலும் லாஸ்லியாவை மீராவும், சாக்சி, ஷெரினை மதுமிதாவும் நாமினேட் செய்தாலும் அவர்கள் எவிக்சன் பட்டியலில் இணையவில்லை. அபிராமி இந்த வார கேப்டன் என்பதால் அவர் நாமினேட் செய்யப்படவில்லை. கவின், சாண்டி, சேரன், ரேஷ்மா, முகின், தர்ஷன் ஆகியோர்களை யாருமே நாமினேஷன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வாரம் மக்களின் ஓட்டெடுப்பின்படி வனிதா அல்லது மீரா வெளியேற நிச்சயம் வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக வனிதா வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் வனிதா வெளியேறிவிட்டால் பிக்பாஸ் திரைக்கதை ஆசிரியர்களுக்கு சிக்கலாகிவிடும். அவர்தான் நிகழ்ச்சிக்கு வலுவான கண்டெண்ட் கொடுத்து வருகிறார். எனவே அவரையும், மீராவையும் பிக்பாஸ் வெளியேற்றுவது சந்தேகம்தான். மதுமிதாவுக்கு நிச்சயம் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதால் அவரையும் பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார். கடைசியில் அப்பாவிகளான மோகன் வைத்யா, சரவணன் ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.