close
Choose your channels

நீ என்ன பெரிய அப்பாடக்கரா? உன்னை வச்சு செய்றேன்: நிரூப்பிடம் சவால் விடும் வருண்!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 46வது நாளாக நடைபெற உள்ள நிலையில் இன்றைய முதல் இரண்டு புரமோக்களிலும் இசைவாணி மற்றும் தாமரை ஆகிய இருவருக்கு இடையே நடந்த மோதல் குறித்து பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் நிரூப் மற்றும் வருண் ஆகிய இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. ’நீ என்னை எதிர்த்து எதிர்த்து பேசி கொண்டே இருக்கிறாய், நான் சொல்வதை நீ கேட்டே ஆகவேண்டும். கேட்பதாக இருந்தால் இரு அல்லது எழுந்து வெளியே போ என்று வருண் கூற உடனே நிருப் எழுந்து கிளம்பிகிறார்.

அப்போது ’இன்று நான் என்ன சொன்னாலும் நீ கேட்டே ஆகவேண்டும் என்று நிரூபிடம் வருண் ஆவேசத்துடன் கூறுகிறார். அதன்பின் கண்ணாடி முன் பிம்பமாக நிற்கும் போது ’நீ சொன்னதை எல்லோரும் கேட்டார்கள். நானும் கேட்டேன். ஆனால் நீ ஏன் கேட்க மாட்டேன் என்கிறாய்?. நீ என்ன பெரிய அப்பாடக்கரா? நீ ஹைட்டில் பெரியவனாக இருந்தால் நீ என்ன பெரிய மாஸா? நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், நான் உன்னை வச்சு செய்கிறேன் என்று வருண் சவால் விடும் காட்சியும் இன்றைய புரோமோவில் உள்ளன.

இன்றைய காரசாரமான புரமோ வீடியோக்களை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.