close
Choose your channels

ரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட்டில் வில்லனா?

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சமீபத்திய படங்கள் அனைத்திலுமே பாலிவுட் நடிகர்கள் தான் வில்லன்களாக நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’காலா’ படத்தில் நானா படேகர், ’பேட்ட’ படத்தில் நவாசுதீன் சித்திக், 2.0’ படத்தில் அக்ஷய்குமார், ’தர்பார்’ படத்தில் சுனில் ஷெட்டி ஆகியோர் வில்லன்களாக நடித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்திலும் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் தான் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தா அல்லது புனேவில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் குறித்து பரபரப்பான செய்திகள் வெளியாகி வருவதையடுத்து ராமோஜிராவ் பிலிம்சிட்டியிலேயே அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. இதற்காக கொல்கத்தா போன்ற செட் அமைக்கும் பணிகள் தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படியே போனால் ’அண்ணாத்த’ படம் கிட்டத்தட்ட முழுவதுமே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் படமாகும் என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.