close
Choose your channels

மரண வதந்தியால் எனக்கு திருஷ்டி கழிந்துவிட்டது : நடிகர் செந்தில்

Saturday, May 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் செந்தில் தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் திருச்சியில் பிரச்சாரம் செய்துவிட்டு அங்கிருந்த ஒரு ஓட்டலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியது.

இதனால் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தான் நலமுடன் இருப்பதாகவும் தன்னை விசாரித்த அனைவருக்கும் செந்தில் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடையே செந்தில் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். நேற்று திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் செய்தேன். இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடித்து விட்டு திருச்சி ஓட்டலுக்கு திரும்பி கொண்டிருந்த போது இயக்குனர் உதயகுமார் என்னை தொடர்பு கொண்டார். வாட்ஸ் அப்பில் நான் இறந்து விட்டதாக தகவல் பரவுவதாக கூறினார்.

இதைக் கேட்ட போது எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. இரவு விடிய, விடிய வெளிநாடுகளிலிருந்தும், எனது உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் விசாரிப்புகள் வந்து கொண்டே இருந்தன. எனக்கு திருஷ்டி கழிந்து விட்டதாக நான் நினைக்கிறேன். வாட்ஸ் அப்பில் பரவும் இது போன்ற மலிவான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.