close
Choose your channels

'வலிமை' படத்தின் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல்!

Thursday, March 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான ’வலிமை’ திரைப்படத்தின் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

’மெட்ரோ’ படத்தை தயாரித்த ஆனந்த கிருஷ்ணன் என்ற தயாரிப்பாளர் சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் ’வலிமை’ திரைப்படம் தங்களது ’மெட்ரோ’ படத்தின் காப்பி என்று வழக்கு பதிவு செய்தார். மேலும் ’வலிமை’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது என்பதும் நாளை திட்டமிட்டபடி ’வலிமை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் மீது பொய்யான வழக்கு போட்ட ’மெட்ரோ’ தயாரிப்பாளர் அனந்த கிருஷ்ணன் மீது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாக இயக்குனர் எச்வினோத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’வலிமை’ திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க தினசரி செய்திகளின் அடிப்படையில் உருவானது என்றும் தன் மீது வீண்பழி சுமத்திய தயாரிப்பாளர் அனந்தகிருஷ்ணன் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos