close
Choose your channels

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குனரின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட்..!

Monday, July 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை என்பவரின் இயக்கத்தில் உருவான ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த இயக்குனரின் அடுத்த படம் ’தண்டகாரண்யம்’ என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்து வருவதாகவும் பிரதீப் காளி ராஜா ஒளிப்பதிவில் செல்வா ஆர்கே படத்தொகுப்பில் உருவாக்கி வரும் இந்த படம் அதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரை வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.