close
Choose your channels

மன்னிப்பு கேட்க சொல்வதுதான் ஜனநாயகமா? 'சர்கார்' விவகாரம் குறித்து கமல்

Wednesday, November 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததை அடுத்து அந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ,இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அரசின் இலவச பொருட்களை விமர்சனம் செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகள் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பிரமாண பத்திரம் எழுதி தரவேண்டும் என்றும் வாதாடப்பட்டது. இன்றைய விசாரணையில் முருகதாஸ் நிலை குறித்து தெரியவரும்.

இந்த நிலையில் அரசின் மன்னிப்பு கோரிக்கைக்கு நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'சர்கார்' திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாகவும், தோற்கடிக்கப்பட்ட பாஸிசம் மீண்டும் தலைதூக்குவதாகவும், இது ஜனநாயக முறையல்ல என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.