close
Choose your channels

இறுதிக்கட்டத்தில் 'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படம்: விரைவில் ரிலீஸ்

Tuesday, March 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ என்ற வெற்றி படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது நிவின்பாலி, சூரி நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

மேலும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையிலான ரயில் பயணத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை இவ்வாண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.