close
Choose your channels

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Monday, May 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் நாதுராம் கோட்சே என்று பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திராவிட கழக தலைவர் கி.,வீரமணி போன்ற ஒருசிலர் மட்டுமே அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். கமலுக்கு எப்போதுமே நாக்கில் சனி இருக்கும். தீவிரவாதத்திற்கு மதம் என்ற ஒன்று கிடையாது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற மதபேதம் தீவிரவாதத்திற்கு கிடையாது. தீவிரவாதம் செய்பவர்கள் தீவிரவாதிகள் தான். அவர்களோடு மதத்தை சம்பந்தப்படுத்தகூடாது.

இந்து தான் முதல் தீவிரவாதம் என்று சொல்லி சிறுபான்மையர்களுக்காக வாழ்ந்து வருவதாக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை யாராவது ஒருவர் அறுக்கத்தான் போகின்றார்கள். யாரையோ திருப்தி செய்ய, அன்னிய சக்திகளின் ஆதிக்கத்தை திருப்தி செய்ய துணை போகின்றார். கமல் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் விஷமாக உள்ளது. எனவே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவோம்' என்று அமைச்சர் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.