close
Choose your channels

தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி… வைரல் புகைப்படம்!

Wednesday, September 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக தனிமையில் வாழ முடிவெடுத்துள்ளார். இதையடுத்து தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட விசித்திரமும் நடைபெற்று இருக்கிறது. இந்தத் திருமணத்தைப் பலர் கொண்டாடி வருவது இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் வைரலாகியது. அதற்குப்பின் ஒரு ஆண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது போன்ற விசித்திரங்கள் அதிகரித்து விட்டன. அந்த வகையில் தற்போது பிரேசில் நாட்டைச்சேர்ந்த பிரபல மாடல் அழகி கிரிஸ் கேலரா தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

33 வயதான இந்த மாடல் அழகியின் திருமணம் பிரேசிலில் உள்ள பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்தத் திருமணத்திற்கு நண்பர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ளனர். இதுகுறித்து பேசிய கிரிஸ் கேலரா எனது கடந்த கால வாழ்க்கையில் ஏகப்பட்ட முறிவுகளை அனுபவித்துவிட்டேன். எனவே தனிமையில் வாழ்வதுதான் சிறப்பான உணர்வு என்பதை புரிந்து கொண்டேன். இந்த உணர்வை கொண்டாடும் விதமாக திருமணமும் செய்துகொண்டேன் என்று உற்சாகம் பொங்க தெரிவித்துள்ளார்.

கிரிஸ் கேலரா செய்துகொண்ட இந்த திருமணத்தை சில நெட்டிசன்கள் விமர்சிக்கத்தான் செய்கின்றனர். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற திருமணங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.