close
Choose your channels

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த 'நாம் தமிழர் கட்சி' சீமான்: என்ன சொன்னார் தெரியுமா?

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றார் என்பதும், அதுமட்டுமின்றி தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தகுதி பெற்றவர் அவர் ஒருவரே என்பதும் தெரிந்ததே. இந்த சாதனைக்காக அஜித்துக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உட்பட பல பிரபலங்கள் அவருக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இது இதுகுறித்து கூறியதாவது

சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

இவ்வாறு நாம் தமிழர் கட்சி சீமான் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.