close
Choose your channels

வதந்தி என உறுதியானதால் மகிழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்!

Monday, August 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரவி வந்த ஒரு வதந்தி காரணமாக நயன்தாரா முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி வதந்தி என உறுதி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் நயன்தாரா முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிக்க அவர் 20 கோடி சம்பளம் பெற்றதாக ஒரு செய்தி ஊடகங்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனை அடுத்து ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வாங்கும் நயன்தாராவை ஊர்வசி பின்னுக்கு தள்ளி விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் ஊர்வசி தரப்பினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர். ஊர்வசிக்கு ரூ. 20 கோடி சம்பளம் என வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டது என்றும் அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து நயன்தாராவை விட குறைவான சம்பளமே ஊர்வசி ரெளட்டாலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுவதால் மீண்டும் முதலிடத்தில் நயன்தாரா தான் உள்ளார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தி லெஜண்ட்  திரைப்படத்திற்கு ஊர்வசிக்கு ரூ.7 முதல் 8 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.