close
Choose your channels

இந்த ஒரு காரணத்திற்காக தான் ஆடியோ லாஞ்சுக்கு செல்வதில்லை: நயன்தாரா

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் அஜித் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே தாங்கள் நடிக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வது இல்லை என்றும் படங்களில் ஒப்பந்தம் ஆகும் போதே புரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டோம் என்று ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தை அஜித் கிட்டத்தட்ட ஆரம்பம் முதலே கடைபிடித்து வரும் நிலையில் நயன்தாரா கடந்த சில வருடங்களாக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்லாதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். ’நான் நடித்த ஆரம்பகட்ட படங்களில் நாயகியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாத படங்கள்தான் வந்துகொண்டு இருந்தன. அது ஒரு காலகட்டமாக இருந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றாலும் நடிகைகளை ஒரு ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக மேடையில் நம்மை பற்றி ஏதாவது பேசுவார்கள். எந்த விதத்திலும் நமக்கு அந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் இருக்காது. அதனால்தான் தான் எந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சிக்க்கும் நான் செல்வதில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை தொட்ட பிறகுதான் புரமோஷனுக்கு செல்லலாம் என்று இருந்தேன் என்றும் ஆனாலும் புரமோஷனுக்கு தற்போதும் செல்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் தற்போது அதிகமாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள் என்றும் அதை நினைத்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.