close
Choose your channels

சித்ரா மரணத்திற்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதையும் ஒரு காரணமா?

Sunday, December 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சித்ராவின் மரணத்திற்கு மேலும் சிலர் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாண்டியன்ஸ்டோர் கதையும் ஒரு காரணமா? என்ற தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் சித்ராவின் முல்லை கேரக்டருக்கு காதல் காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அதிகம் இருந்ததாகவும், நிச்சயதார்த்தத்திற்கு பின்னரும் காதல் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் அதிகம் இருப்பதாக ஹேமந்த், சித்ராவின் தாயாரிடம் புகார் கூறியதாகவும், இதனையடுத்து சித்ராவின் தாயார் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் பிரியாதம்பியுடன் தொடர்புகொண்டு காதல் காட்சிகளை குறைக்க வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது

ஆனால் முல்லை கேரக்டரின் காதல் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் மற்றும் தொலைக்காட்சிக் குழுவினர் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் காதல் காட்சிகள் தொடர்ந்ததாகவும் தெரிகிறது. இதனால் சித்ராவின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது 

முல்லை கேரக்டரின் நெருக்கமான காதல் காட்சிகளால் சித்ராவின் குடும்பத்தில் பிரச்சனை என தெரிந்தும் காதல் காட்சிகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் வைத்ததும், சித்ராவின் தற்கொலைக்கு காரணமா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.