close
Choose your channels

ஐதராபாத் பெண் டாக்டர் கொலையை படமாக்கும் பிரபல இயக்குனர்

Saturday, February 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பெண் டாக்டர் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் ஒலித்தது. குற்றவாளிகளை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் என பெண் எம்பிக்கள் ஆவேசமாக பேசினர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இந்த பரபரப்பான சம்பவத்தை திரைப்படமாக்க பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது.

ஐதராபாத் திஷா'வின் கொடூரமான கொலை, நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நடந்த கொடூரமான கொலை ஆகும். நான் இயக்கவுள்ள இந்த படம் பாலியல் வன்கொடுமையாளர்கள் குறித்தும், அவர்கள் ஏன் திஷாவை கொன்றார்கள் என்பது குறித்தும் விரிவாக விளக்கும்.

பாலியல் குற்றவாளிகள் முந்தைய பாலியல் குற்றங்களில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முயல்கின்றார்களே தவிர திருந்துவதாக தெரியவில்லை. இதுகுறித்த எனது படம், எல்லோருக்கும் பயங்கரமான பாடத்தை உணர்த்தும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.