close
Choose your channels

பெரும் தொகையில் பண மோசடியா? மேனேஜரை நீக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ராஷ்மிகா மந்தனா திடீரென்று தன்னுடைய நீண்டநாள் மேலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் பண மோசடியில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த இவர் நேஷனல் கிரஷ் என்றே இளம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழில் 'சுல்தான்' போன்ற ஒருசில திரைப்படத்தில் நடித்திருந்த அவர் சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து 'வாரிசு' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து 'புஷ்பா 2' திரைப்படத்திலும் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் இணைந்து 'அனிமல்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக மேனேஜராக வேலைப்பார்த்து வந்தவர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பல்வேறு சந்தர்பங்களில் நடைபெற்ற இந்த மோசடியை நடிகை ராஷ்மிகா அறிந்து, உடனேயே அவரை வேலையை விட்டு நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 80 லட்சம் ரூபாய் அளவிற்கு பண மோசடி நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அளவில் பிரபலமாகி இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்தவரே இப்படி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவல் தற்போது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.