close
Choose your channels

மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

Saturday, January 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக கருதப்படுபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவருடைய நேர்மை, துணிவு மாணவர்களை ஈர்த்தது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு சற்றுமுன்னர் சகாயம் ஐஏஎஸ் நேரில் வந்து மாணவர்களை பாராட்டியதோடு உற்சாகப்படுத்தினார்.
அரசியல்வாதிகளை நெருங்கவிடாமல் செய்த மாணவர்கள், சகாயம் அவர்களுக்கு சிவப்புக்கம்பளம் கொடுத்து உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.
ஏற்கனவே சகாயம் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பொங்கல் தினத்தில் நாமக்கல்லில் நடந்த விழா ஒன்றில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.