close
Choose your channels

பிக்பாஸ் எவிக்சனில் எதிர்பாராத திருப்பம்: வெளியேறியது யார் தெரியுமா?

Saturday, September 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மும்தாஜ், செண்ட்ராயன், ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வந்த தகவலின்படி ஐஸ்வர்யா குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த தகவலின்படி செண்ட்ராயன் வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இது அனைவருக்கும் எதிர்பாராத திருப்பமாக கருதப்படுகிறது.

பிக்பாஸ் டைட்டில் வின்னராக செண்ட்ராயன் வருவதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் திடீரென செண்ட்ராயன் வெளியேறியதற்கு ஒருசில காரணங்களும் கூறப்படுகிறது. இந்த வ் வார டாஸ்க்கில் பார்வையாளர்கள் அதிகம் வெறுத்த ஐஸ்வர்யாவை, 'கண்ணே மணியே, தங்கமே என்று செண்ட்ராயன் கொஞ்சியதை யாரும் ரசிக்கவில்லை. அதனால் கூட அவருக்கு விழ வேண்டிய கணிசமான ஓட்டுக்கள் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அல்லது வழக்கம்போல் பிக்பாஸ் தனது பவரை வைத்து ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டாரா? அல்லது ஐஸ்வர்யா கூறியது போல் கடவுள் அவரை காப்பாற்றிவிட்டாரா? எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம். இந்த வாரம் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டதால் அவர் நிச்சயம் இறுதி போட்டியில் நுழைய கூட வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.