close
Choose your channels

'ரஜினிமுருகன்' பிரச்சனை முடிந்ததால் நிம்மதி அடைந்த சிவகார்த்திகேயன்

Saturday, October 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸுக்கு தயாராக இருந்தும் ஈராஸ் நிறுவனத்திற்கு திருப்பதி பிரதர்ஸ் கொடுக்க வேண்டிய தொகை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதாகவும், இதனால் 'ரஜினி முருகன்' திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

ஈராஸ் நிறுவனத்தின் பிரச்சனை முடிந்ததை அடுத்து மற்ற பைனான்சியர்களிடம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் சுமுகமாக பேச்சுவார்த்தை முடிந்துவிடும் வாய்ப்பிருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகள் அனைத்தும் முடிந்தாலும், தீபாவளிக்கு 'தூங்காவனம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகவுள்ளதால் 'ரஜினிமுருகன்' திரைப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த படத்தின் பிரச்சனை முடிந்துள்ளதால் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.