close
Choose your channels

பாகிஸ்தானுக்கு நன்றி கூறிய 'பாகுபலி 'இயக்குனர்

Wednesday, March 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் உலகின் கவனத்தை தென்னிந்தியா பக்கம் திரும்ப வைத்தன. இதுவரை இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான் என்று பல நாடுகள் எண்ணியிருந்த நிலையில் தென்னிந்தியாவிலும் உலக தரத்தில் சினிமா தயாரிப்பவர்கள் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்க வைத்த படங்களில் பாகுபலி படமும் ஒன்று.

இந்த நிலையில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்த சினிமா விழாக்களில் பாகுபலியின் இரண்டு படங்களும் திரையிடப்பட்டதோடு இயக்குனர் ராஜமெளலியும் கெளரவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்படி ராஜமெளலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, 'பாகுபலி திரைப்படம் எனக்கு உலகின் பல நாடுகளுக்கு செல்ல உதவியது. இதில் பெரும் உற்சாகத்துக்குரிய விஷயம் என்னவெனில் பாகிஸ்தானில் இருந்தும் அழைப்பு வந்ததுதான். கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக பாகிஸ்தானுக்கு எனது நன்றிகள் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.