close
Choose your channels

ஃபர்ஸ்ட்லுக் வரும் முன்னே வியாபாரத்தை தொடங்கிய சூர்யா படம்

Friday, January 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'எஸ் 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்

'நானும் ரெளடிதான்' வெற்றி படத்திற்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன், சூர்யாவுடன் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பால் இந்த படம் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தமிழக உரிமையை பெற மிகப்பெரிய தொகை தர முன்வந்துள்ளதாகவும் இதுகுறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. இன்னும் ஃபர்ஸ்ட்லுக்கே வெளிவராத நிலையில் வியாபாரம் தொடங்கிவிட்டதை அறிந்து கோலிவுட் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது

சூர்யா, கீர்த்திசுரேஷ், சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்ஜே பாலஜி, சுரேஷ் மேனன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.