close
Choose your channels

கடைசி வரை நிறைவேறாமல் போன ஸ்ரீதேவியின் கடைசி ஆசை

Friday, March 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரீதேவி கடந்த வாரம் துபாயில் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தது அவருடைய குடும்பத்தினர்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பாக ஸ்ரீதேவியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்த போனிகபூருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே கூறலாம்.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் வாழ்ந்த அந்தேரி வீடு திடீரென தீப்பிடித்தது. இதனை அடுத்து ஸ்ரீதேவியின் குடும்பம் தற்காலிகமாக வேறு வீட்டிற்கு மாறினர். ஸ்ரீதேவி இதுவரை தன்னுடைய கணவரிடம் எதுவும் கேட்டது இல்லையாம். அவர் கேட்ட ஒரே விஷயம், மீண்டும் பழைய அந்தேரி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதுதானாம்.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் ஆசையை பூர்த்தி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் போனிகபூர் தன்னுடைய அந்தேரி வீட்டை புதுப்பிக்க தொடங்கினார். வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி ஸ்ரீதேவியின் பிறந்த  நாள் அன்று அந்தேரி வீட்டில் குடியேற அவர் முடிவு செய்திருந்தாராம். இதனை அவர் ஸ்ரீதேவிக்கு கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்று அவர் முடிவு செய்து அதை சஸ்பென்ஸ் ஆக  வைத்திருந்தாராம். இந்த நிலையில் தான் ஸ்ரீதேவி திடீரென மறைந்துவிட்டார். அந்தேரி வீட்டுக்கு குடிபோக வேண்டும் என்ற அவருடைய கடைசி ஆசை கடைசி  வரை நிறைவேறாமல் போனது போனிகபூருக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.