close
Choose your channels

வலுவான தலைமுடி வேண்டுமா? நடிகை குஷ்பு சொன்ன டிப்ஸை try பண்ணுங்க…

Friday, July 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு இன்றைக்கும் பல யூத் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது அழகை தொடர்ந்து பராமரித்து வருகிறார். நடிப்பைத் தவிர அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இவர் தனது பிசியான வாழ்க்கைக்கு மத்தியில் ஸ்கின் கேர், ஹேர் கேரில் அதிகம் அக்கறை காட்டுகிறார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டா ரசிகர்களுக்கு நடிகை குஷ்பு சொல்லிய ஹேர் கேர் டிப்ஸ் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது. நடிகைகள் பிசியான வாழ்க்கைக்கு மத்தியில் செயற்கை க்ரீம்களை பூசிக் கொள்வார்கள், ஷாம்புவை பயன்படுத்துவார்கள் என நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நடிகை குஷ்பு தன்னுடைய ஹெல்தியான கூந்தலுக்கு வெந்தயம்தான் முக்கியக் காரணம் எனச் சொல்லி இருக்கிறார்.

அதுவும் வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து அந்த வெந்தயத்தோடு சேர்த்து செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களையும் சேர்த்து கூடவே தயிர், முட்டை, ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றையும் சேர்த்து அரைத்து கொள்வாராம். அதை ஒரு பேக் போல தலையில் பூசிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊற வைப்பாராம். பின்னர் கூந்தலை எப்போதும்போல அலசினால் வலுவான ஆரோக்கியமான கூந்தலை நாமும் பெறலாம் எனத் தெரிவித்து இருக்கிறார்.

வெந்தயம் என்பது உடலுக்கு அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒன்று. அதேபோல தயிர் பொடுகை நீக்க உதவுகிறது. முட்டை தலையில் உள்ள முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும். செம்பருத்தி இலை மற்றும் பூக்கள் முடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு அதன் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. இத்தனை நல்ல அம்சம் கொண்ட ஹேர் டிப்பை உபயோகித்து நீங்களும் பயன்பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.