close
Choose your channels

படுக்கைக்கு அழைத்த விவகாரம்: வரலட்சுமி அதிர்ச்சி தகவல்

Sunday, March 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நடிகை வரலட்சுமி பரபரப்பான பதில் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளாக இருந்தும் தனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாகவும் ஆனால் அதனை போல்டாக மறுத்து விட்டதாகவும் அதனால் தனக்கு வாய்ப்புகள் கிடைக்க காலதாமதம் ஆனதாகவும் வரலட்சுமி கூறினார். சுமார் ஐந்து வருடங்கள் தான் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் அதன் பின்னர் எடுத்த விடா முயற்சியால் தற்போது 25 படங்களை முடித்துவிட்டு 29ஆவது படத்தில் நடித்து வருவதாகவும் கூறினார்.

படுக்கைக்கு அழைக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நடிகைதான் என்றும் படுக்கையில் சம்மதித்து விட்டு அதன் பின்னர் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று புலம்புவது வீண் என்றும் முதலிலேயே முடியாது என்று கூறிவிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

நடிகைகள் வாய்ப்பு பெற இரண்டு வழிகள் இருக்கிறது என்றும் ஒன்று படுக்கைக்கு சம்மதித்து விட்டு அதன் மூலம் வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகையாகலாம் என்றும் அதற்கும் ஒரு தைரியமான மனநிலை வேண்டும் என்று கூறினார். அப்படி முன்னுக்கு வந்தாலும் அது தவறில்லை, அது அவரவர் எடுக்கும் முடிவு என்றும் கூறிய வரலட்சுமி இரண்டாவதாக தன்னைப்போல் படுக்கைக்கு வர மாட்டேன் என்று தைரியமாக மறுத்து விட்டு முழுக்க முழுக்க திறமைக்கு மதிப்பு கொடுக்கும் இயக்குனர்களிடம் பணிபுரிய வேண்டும் என்றும் இதற்கு காலதாமதம் ஆனாலும் கெளவரமான வழி என்றும் கூறினார்.

இரண்டு வழிகளில் எந்த வழிகளை தேர்ந்தெடுத்தாலும் ஓகே தான் என்றும் ஆனால் படுக்கைக்கு சம்மதித்து விட்டு அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்புவதும், புகார் அளிப்பதும் தேவையில்லாத ஒன்ரு என்றும் வரலட்சுமி கூறியுள்ளார். வரலட்சுமியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.