close
Choose your channels

ஒரே நேரத்தில் 2 மொழிகளில் ரீமேக் ஆகும் 'கத்தி'

Wednesday, September 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் இருவேடங்களில் நடித்த 'கத்தி' மாபெரும் சூப்பர் ஹிட் ஆகி, ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் அந்தந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட்டு அந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது 150வது படத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இந்த படத்திற்காக அவர் பல கதைகளை கேட்டு வந்த நிலையில் தற்போது 'கத்தி' படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பூரி ஜெகந்நாத் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த படம் 'கத்தி' படத்தின் ரீமேக்காக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 'கத்தி' படத்தில் அரசியல் நெடி அதிகம் என்பதால் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் ஆகியோர்களுக்கு இந்த படத்தின் கச்சிதமாக பொருந்தும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படங்கள் குறித்து அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.