close
Choose your channels

செக் மோசடி வழக்கில் மோகன்பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை!

Wednesday, April 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோகன்பாபுவின் ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த ஒரு படத்தை இயக்கிய இயக்குனர் சவுத்ரி என்பவருக்கு சம்பளமாக செக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செக் போதிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டதால் அந்த இயக்குனர் சவுத்ரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மோகன்பாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ.41.75 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இருப்பினும் மோகன்பாபு தரப்பு கோரிக்கையை ஏற்று மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் மோகன்பாபு, ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.