close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானை யாரென்றே தெரியாது: சீனியர் நடிகரின் பேட்டியால் பரபரப்பு!

Wednesday, July 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகிலும், ஏன் உலக அரங்கிலும் ஏஆர் ரஹ்மான் புகழ்பெற்றவர் என்பதும், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல தெலுங்கு சீனியர் நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா ஏஆர் ரஹ்மான் யார் என்று எனக்கு தெரியாது என்று பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதையும் அவர் அவமதிக்கும் வகையில் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மறைந்த தனது தந்தை என்டிஆரின் கால் பாதத்திற்கு கூட பாரத ரத்னா விருது தகுதியற்றது என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தெலுங்கு சினிமாவுக்கு எங்களது குடும்பம் அளித்த பங்களிப்பை எந்த விருதும் ஈடுசெய்ய முடியாது என்றும் கூறிய பாலகிருஷ்ணா ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் விருதை வென்றார் என்று கேள்விப்பட்டேன் என்றும் அவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார்

ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர். ரஹ்மானையும் பாரத ரத்னா விருதையும் அவமதிக்கும் வகையில் பேசிய என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.