close
Choose your channels

இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படத்தின் முக்கிய தகவல்.. அப்ப 'பத்து தல 2' என்ன ஆச்சு?

Friday, May 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ‘பத்து தல ’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபல் ஒன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ராமன் தேடிய சீதை’ ’சாருலதா’, ‘அலோன்’, ‘ஹேய் சினாமிகா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனத்தின் அடுத்த படத்தை கிருஷ்ணா இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில், ‘குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்குவதில் நான் பெருமை அடைகிறேன், இந்த படத்திற்கான கதை விவாதங்கள் முடிந்து விட்டது, விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும்’ என்று கூறியுள்ளார்

அதேபோல் குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறிய போது ’எங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளதை அறிவிப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம், இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். கிருஷ்ணாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானதை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என முடித்துள்ள கிருஷ்ணா, தற்போது வேறு படத்தை இயக்கவிருப்பதை அடுத்து ‘பத்து தல 2’ எப்போது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.