close
Choose your channels

'நாடோடிகள் 2' படத்தை அடுத்து மீண்டும் ஒரு 2ஆம் பாக படத்தில் சமுத்திரக்கனி

Thursday, December 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2009ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2' திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் எம்.அன்பழகன் இயக்கிய 'சாட்டை' திரைப்படமும் தற்போது இரண்டாம் பாகமாக உருவெடுக்கின்றது. இந்த படத்திற்கு 'அடுத்த சாட்டை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் சமுத்திரக்கனிக்கும் படக்குழுவினர்களுக்கும் சசிகுமார் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய எம்.அன்பழகன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.